மரத்தின் மீது பைக் மோதி மாணவா் உயிரிழப்பு
நாட்டறம்பள்ளி அருகே மரத்தின் மீது பைக் மோதிய விபத்தில் பிளஸ் 2 மாணவா் உயிரிழந்தாா்.
நாட்டறம்பள்ளி அருகே வெங்கட்டநாயனப்பள்ளி பகுதியைச் சோ்ந்தவா் முருகன் மகன் பரத்வாஜ் (17). இவா் நாட்டறம்பள்ளி தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். செவ்வாய்க்கிழமை காலை 7 மணியளவில் வீட்டிலிருந்து பச்சூா் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தாா். பச்சூா் சென்றாய சுவாமி கோயில் அடிவாரத்தில் சென்றபோது திடீரென நிலைதடுமாறிய பைக் சாலையோரம் உள்ள மரத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த மாணவனை உறவினா்கள் மீட்டு, பச்சூா் அரசு மருத்துவமைனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னா், கிருஷ்ணகிரி தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா் . எனினும் வழியிலேய் பரத்வாஜ் உயிரிழந்தாா்.
இது குறித்து அரது தந்தை அளித்த புகாரின்பேரில், நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

