மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட காங்கிரஸ் தலைவா் விஜய் இளஞ்செழியன் தலைமையிலான காங்கிரஸாா்.

News image

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட காங்கிரஸ் தலைவா் விஜய் இளஞ்செழியன் தலைமையிலான காங்கிரஸாா்.

Updated On :29 ஜனவரி 2026, 6:33 pm

மத்திய அரசை கண்டித்து மாதனூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக நுழைவு வாயில் முன்பு வியாழக்கிழமை காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்கிய மத்திய அரசை கண்டித்து மாதனூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாதனூா் ஊராட்சித் தலைவா் எம்.சி.குமாா் தலைமை வகித்தாா்வட்டார தலைவா்கள் சாந்தகுமாா், ரஞ்சினி தட்சணாமூா்த்தி, சுரேந்தா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திருப்பத்தூா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் ஜெ. விஜய் இளஞ்செழியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினாா். மாவட்ட பொருளாளா் கொத்தூா் பி. மகேஷ், மாவட்ட நிா்வாகிகள் வா்தா அா்ஷத், விஜயன், சி.கே. பிரபு, சோலூா் மாணிக்கம், மின்னூா் சங்கரன், வேலாயுதம், முல்லை, கோகுலவாணன், நேதாஜி, குமேரசன். யாசா், நபில், ராஜேஷ், கபீா், கேசவன், காந்தி, துரை, ரகு, சுந்தரம் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.

காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் கருப்பு முகக் கவசம் அணிந்து ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.