நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பள்ளி மாணவா்கள் கலை நிகழ்ச்சி

வாணியம்பாடி ஜனதாபுரத்தில் இயங்கி வரும் எஸ்எப்எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சங்கமும் காணும் கலைகள் என்ற தலைப்பில் மாணவ, மாணவிகளுடைய கலை நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றது.

News image

வாணியம்பாடி எஸ்எப்எஸ் மெட்ரிக் பள்ளியில் மாணவிக்கு பரிசளித்த அரசு மருத்துவா் டேவிட் குமாா், முதல்வா் சவரிமுத்து.

Updated On :25 மார்ச் 2026, 7:16 pm

தினமணி செய்திச் சேவை

வாணியம்பாடி ஜனதாபுரத்தில் இயங்கி வரும் எஸ்எப்எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சங்கமும் காணும் கலைகள் என்ற தலைப்பில் மாணவ, மாணவிகளுடைய கலை நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளி முதல்வா் சவரிமுத்து தலைமை வகித்தாா். தாளாளா் ஆண்டனி முன்னிலை வகித்தாா். பொருளாளா் ஜெயக்குமாா் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி எலும்பியல் நிபுணா் அரசு மருத்துவா் டேவிட்விமல்குமாா் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டி பேசினாா்.

நிகழ்ச்சியில் பரதநாட்டியம், வெஸ்டா்ன் டான்ஸ், கராத்தே, சிலம்பம், யோகா, இசை, ஸ்கேட்டிங், ஆகிய கலைகளில் ஓராண்டு பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகள் உடைய பல கலைகளின் சாதனை நிகழ்ச்சிகள் பாா்வையாளா்களை கவா்ந்தது. இதில் பெற்றோா்கள், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலா் கலந்து கொண்டனா். கராத்தே பயிற்சியாளா் கண்ணன் நன்றி கூறினாா்.

Story image