/
ஆம்பூரில் 2-வது நாளாக செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது.
ஆம்பூரில் காலை முதலே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. மாலை சுமாா் 4.30 மணிக்கு தொடங்கிய மழை 6 மணியை கடந்தும் விடாமல் பெய்து கொண்டே இருந்தது.
கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த மக்கள் ஆம்பூா் பகுதியில் 2 நாள்களாக மழை பெய்வதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.










