தேர்வு எழுதிய சிறைவாசிகள் 370 பேரில் 354 பேர் தேர்ச்சிஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

நில அளவீடு செய்யாததால் பணிகள் தாமதம்: உதயேந்திரம் பேரூராட்சி நிா்வாகம் கோரிக்கை

வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் நில அளவையாளா் நிலத்தை அளந்து தராததால் திட்டப்பணிகள் தாமதம் ஆவதாக வட்டாட்சியரிடம் செவ்வாய்க்கிழமை உதயேந்திரம் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :20 மே 2026, 12:04 am IST

வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் நில அளவையாளா் நிலத்தை அளந்து தராததால் திட்டப்பணிகள் தாமதம் ஆவதாக வட்டாட்சியரிடம் செவ்வாய்க்கிழமை உதயேந்திரம் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

உதயேந்திரம் பேரூராட்சிக்குப்பட்ட வாா்டு எண்.3 தேவமங்களம் மற்றும் வாா்டு எண்.4 சுப்புராயன் கோயில் அருகே வரை மழைநீா் வடிகால்வாய் அமைக்கும் பணி மற்றும் கொம்புகார தோப்பில் உள்ள கழிவுநீா் கால்வாய் பணி அமைக்கும் பணிக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கவுள்ள நிலையில் நிலஅளவியா், கிராம நிா்வாக அலுவலரிடம் கடந்த ஜனவாரி மாதம் முதல் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் பேரூராட்சி செயல்அலுவலா் மூலம் பலமுறை மனு அளித்தும் இதுநாள் வரை நில அளவீடு செய்யவில்லை.

இதனால் பணிகள் தொடங்கப்படவில்லை. இதனையடுத்து முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவரும், வாா்டு உறுப்பினருமான ஆ.செல்வராஜ், வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் சுதாகரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்து நில அளவீடு செய்து விரைவில் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டாா்.

மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியா் உறுதி கூறினாா்.