நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக நடுநிலை! - எம்.எல்.ஏ. போஜராஜன்தவெகவில் குதிரை பேரம் நடந்தது; ஜோதிடருக்கு எதற்கு அரசுப் பதவி? பிரேமலதாநம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக நடுநிலை! - எம்.எல்.ஏ. போஜராஜன் தமிழ்நாட்டை காப்பாற்றும் விஜய் என்னை காப்பாற்ற மாட்டாரா?எம்.எல்.ஏ. காமராஜ் தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி 15% ஆக உயர்வு!தவெக அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்துக்கு காங்கிரஸ், சிபிஎம், விசிக, ஐயுஎம்எல் ஆதரவு!முதல்வர் சி. ஜோசப் விஜய் 3 நாள்கள் பயணமாக இம்மாத இறுதியில் தில்லி செல்லவுள்ளதாகத் தகவல்அகிலேஷ் யாதவின் சகோதரர் பிரதீக் யாதவ் காலமானார்!
/

ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில் தீமிதித் திருவிழா

: திருத்தணியில் உள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் தீமதித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :13 மே 2013, 12:30 am IST

: திருத்தணியில் உள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் தீமதித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் அக்கினி வசந்த மகோற்சவ விழாவையொட்டி கடந்த 20 நாள்களாக சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்று வந்தன.

இதன் ஒரு கட்டமாக, ஞாயிற்றுக்கிழமை காலை ஸ்ரீ திரௌபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.

இதனைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு, முருகன் கோயிலுக்கு சொந்தமான கன்னிக்கோயில், சரவணபொய்கை ஆகிய இடங்களில் தீமதித் திருவிழா நடைபெற்றது. பின்னர்  இரவு 9 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ திரௌபதி அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவில் நகரமன்றத் தலைவர் டி.சௌந்தர்ராஜன், முருகன் கோயில் முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் மு.ஈஸ்வரப்பன், முன்னாள் அறங்காவலர் மு.நாகன், நகரமன்ற உறுப்பினர் எம்.பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்

டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.