ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சொந்த செலவில் குளத்தை சீரமைக்கும் பொதுமக்கள்..!

திருத்தணி அருகே, பொதுமக்களே தங்கள் சொந்த செலவில் குளத்தை சீரமைத்து வருகின்றனர். 

News image
ரெட்டிக் குளத்தை சீரமைக்கும் பணியில் பொக்லைன் இயந்திரம்.
Updated On :9 நவம்பர் 2017, 10:13 pm

DIN

திருத்தணி அருகே, பொதுமக்களே தங்கள் சொந்த செலவில் குளத்தை சீரமைத்து வருகின்றனர். 
திருத்தணி நகராட்சி, 6 ஆவது வார்டில் உள்ளது ரெட்டிக்குளம். இக்குளத்தில் தண்ணீர் நிறைந்து இருந்தால், இங்குள்ள பெரிய தெரு, முருகப்பா நகர், கம்மாளர் தெரு ஆகிய பகுதிகளில், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயரும். 
இப்பகுதி மக்களின் குடிநீர் பிரச்னையும் தீரும்.
ஆனால், ரெட்டிக்குளம் மண் புதைந்தும், புதர்கள் மண்டியும் கிடந்தது. இதனால், குளம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வறண்டு கிடந்தது.
இந்நிலையில், இக்குளத்தை சீரமைக்கும் பணியை அப்பகுதி பொதுமக்களே தங்களது சொந்த செலவில் சீரமைத்து வருகின்றனர். பொக்லைன் இயந்திரம் மூலம் குளத்தைத் தூர் வாரி, கரைகளைப் பலப்படுத்தும் பணியை துரித வேகத்தில் செய்து வருகின்றனர். 
ஒரு மாதத்திற்குள் குளத்தை முழுமையாக சீரமைத்து விடுவோம் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.