திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரியில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழக பணிமனை அமைக்கப்பட வேண்டும் என அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி தாலுகாவில் பொன்னேரி, மீஞ்சூர், ஆரணி, காரனோடை, பழவேற்காடு, ஆகிய நகர் பகுதிகளும் 200-க்கும் மேற்பட்ட கிராமங்களும் அமைந்துள்ளன. பொன்னேரி-செங்குன்றம் சாலையில் கடந்த 20-ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட விழுப்புரம் கோட்ட போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து, கோயம்பேடு, திருச்சி, புதுச்சேரி, திருப்பதி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், காளஹஸ்தி, தடா, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட நகரங்கள் மற்றும் பொன்னேரியைச் சுற்றிலும் உள்ள கிராமங்களுக்கு 60-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னையைச் சுற்றிலும் இயக்கப்பட்டு வந்த மாநகரப் பேருந்துகளின் தூரம் நீட்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொன்னேரி, பழவேற்காடு, ஆலாடு, தத்தைமஞ்சி, புதுச்சேரி மேடு, பெரும்பேடு, காட்டூர், ரெட்டிப்பாளையம், பெரிய மனோபுரம், சின்னமனோபுரம், கோளூர், புதுச்சேரிமேடு, மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு 20-க்கும் மேற்பட்ட மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
பொன்னேரி பகுதிக்கு இயக்கப்பட்டு வரும் சென்னை மாநகரப் போக்குவரத்து கழக பேருந்துகளில் பெரும்பாலானவை, பாடியநல்லூர் பணிமனையில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன. பொன்னேரி வழியாக பழவேற்காடுக்கு இயக்கப்படும் மாநகரப் பேருந்து பொன்னேரி, பழவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் செல்லும் போது, டயர் பஞ்சர் மற்றும் பழுது ஏதேனும் ஏற்பட்டால், பாடியநல்லூர் பணிமனையில் இருக்கும் ஊழியர்கள் வந்து அதனை சரி செய்த பின்னரே, பேருந்தை இயக்க முடியும் எனும் நிலை உள்ளது. இதுபோன்ற நேரங்களில் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகும் நிலை உள்ளது.
இதுகுறித்து பொன்னேரி பகுதியில் வசிக்கும் சமூல நல ஆர்வலர்கள் கூறுகையில், சென்னையைச் சுற்றிலும் மட்டும் இயங்கி வந்த மாநகரப் போக்குவரத்து கழக பேருந்துகள் தற்போது சென்னையில் இருந்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப் பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. பொன்னேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு பாடியநல்லூர் பணிமனையில் இருந்து 20-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இப்பகுதிக்கு இயக்கப்படும் பேருந்துகளில் திடீரென ஏதேனும் பழுது ஏற்பட்டால் அதனைச் சரி செய்ய கால விரயம் ஏற்படுகின்றது. இதனைத் தவிர்க்க பொன்னேரி பகுதியில் மாநகரப் போக்குவரத்துக் கழக பணிமனையை அமைத்து, இப்பகுதியில் உள்ள கிராம பகுதிகளுக்கு அதிக அளவிலான பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெண் தொழில்முனைவோருக்கு ஜிஎஸ்டி விழிப்புணா்வு
தனியாா் சீட்டு நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளிக்கலாம்: பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் அறிவுறுத்தல்

திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரி மாணவிகளுக்கு வரவேற்பு

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு பேரணி
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


