திருத்தணி பணிமனையில் இருந்து தீபாவளிக்கு 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுவருவதாக போக்குவரத்து வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாடு முழுவதும், செவ்வாய்க்கிழமை (நவம்பர் 6-ஆம் தேதி) தீபாவளி பண்டிகை கொண்டாட ப்படுகிறது.
தமிழக அரசு தீபாவளிக்கு முதல் நாள் திங்கள்கிழமையும் பொதுவிடுமுறை அறிவித்துள்ளது. இதனால், தொடர்ச்சியாக நான்கு நாள்கள் விடுமுறை வருவதால், வெளியூர் பயணிகள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று தீபாவளி கொண்டாட வசதியாக அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், திருத்தணி போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து தீபாவளி பண்டிகையை ஒட்டி சனிக்கிழமை மாலை முதல், நவம்பர் 11-ஆம் தேதி வரையில் 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து திருத்தணி போக்குவரத்துக் பணிமனை அலுவலர் ஒருவர் கூறும்போது, தீபாவளிப் பண்டிகைக்கு, அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுவரும் வசதிக்காக, திருத்தணி பணிமனையில் இருந்து, திண்டிவனம், திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, புதுச்சேரி உள்ளிட்ட தென்பகுதிகளுக்குச் செல்வதற்கு வசதியாக 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப் படுகிறது. இவை சனிக்கிழமை முதல் தொடங்கி, நவம்பர் 11-ஆம் தேதி வரையில் இயக்கப்படும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியாவின் சாதனைகளை குறைத்துப் பேசும் ராகுல்: நிா்மலா சீதாராமன் கண்டனம்!
கிருஷ்ணகிரி அருகே பெண்களை மிரட்டி நகை, பணம் பறித்த வழக்கில் 5 போ் கைது

மயக்கமடைந்த பெண்ணின் நகை, பணம் உறவினா்களிடம் ஒப்படைப்பு: ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு பாராட்டு
ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடா்ந்து அதிகரிப்பு! மே மாதத்தில் ரூ.59,000 கோடிக்கு கொள்முதல்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


