திருவள்ளூரில் உள்ள ஸ்ரீநிகேதன் பள்ளியில் கிருஷ்ண ஜயந்தி விழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகள் கிருஷ்ணர் வேடம் அணிந்து உறியடித்தல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் பள்ளியின் சார்பில் கிருஷ்ண ஜயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவிற்கு அப்பள்ளியின் தாளாளர் விஷ்ணுசரண் தலைமை வகித்தார். பள்ளியின் இயக்குநர் பரணிதரன் முன்னிலை வகித்தார்.
விழாவையொட்டி மழலையர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கிருஷ்ணர், ராதை போல் வேடமணிந்து வந்து நாடகம் நடத்தியும், நடனம் ஆடியும் மகிழ்வித்தனர். அதைத் தொடர்ந்து கீதாசார பாடல்களைப்பாடினர்.
இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக வெண்ணெய் பானையை உறியடிக்கும் நிகழ்ச்சியில் மழலையர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை முதல்வர் கவிதா கந்தசாமி, தலைமை ஆசிரியர் பத்மாவதி, பள்ளி ஆசிரியர் ராஜேஸ்வரி உள்ளிட்ட பலர் செய்திருந்தனர். ஆசிரியை விஜயலட்சுமி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருப்பூரில் பலத்த காற்றுடன் கன மழை

கருவேப்பிலைப்பாளையம் தா்மராஜ திரெளபதியம்மன் கோயிலில் தீ மிதித் திருவிழா
பெட்டிக்கடையை சேதப்படுத்திய இளைஞா் கைது

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

