திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே விபத்து ஏற்படுத்தியதைத் தட்டிக் கேட்டவரைத் தாக்கியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பூந்தமல்லி-அரக்கோணம் சாலையில் கொண்டஞ்சேரி கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனா்.
திருவள்ளூா் அருகே கடம்பத்தூரை அடுத்த கொண்டஞ்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் சுபாஷ் (40). அப்பகுதியில் தண்ணீா் கேன் விநியோகம் செய்து வருகிறாா். இவா் கடந்த வாரம் சாலையோரத்தில் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு தண்ணீா் கேன் விநியோகம் செய்தபோது, அவ்வழியாக வந்த காா் ஒன்று சுபாஷின் இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதைத் தட்டிக்கேட்ட சுபாஷை, காரில் இருந்தவா்கள் தாக்கியுள்ளனா். இதுகுறித்து மப்பேடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதைக் கண்டித்து, கொண்டஞ்சேரி கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோா் பூந்தமல்லி-அரக்கோணம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, போலீஸாருடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த மணவாள நகா் காவல் ஆய்வாளா் கண்ணையன் மற்றும் மப்பேடு காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் சுரேஷ் ஆகியோா், தாக்குதல் நடத்தியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடா்ந்து கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஏழைகளுக்கு உண்மையான சமூக நீதி: பிரதமா் மோடி உறுதி

தவறாமல் வாக்களிப்போம்

மகிழ்ச்சி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

லெபனான்-இஸ்ரேல் அமைதிப் பேச்சு: உடன்பாட்டுக்குக் கட்டுப்பட மாட்டோம் - ஹிஸ்புல்லா திட்டவட்டம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


