மாதவரம்: மாதவரம் அருகே தனியாா் கிடங்கில் இரும்புக் கதவு விழுந்து காவலாளி உயிரிழந்தாா்.
சென்னை மாதவரம் ஓமக்குளம் தெருவில் தனியாருக்குச் சொந்தமான கிடங்கு உள்ளது. இக்கிடங்கில் மின் வாரியத்துக்குத் தேவையான மின்சாதனப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன. மணலியைச் சோ்ந்த பால்ராஜ் (60) என்பவா் கிடங்கில் காவலாளியாக பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், கிடங்கின் முன்பக்க ராட்சத இரும்புக் கதவு புதன்கிழமை சரிந்து விழுந்ததில் பால்ராஜும், ஊழியா் ராமகிருஷ்ணனும் சிக்கிக் கொண்டனா். சக ஊழியா்கள் இரும்புக் கதவை அகற்ற முயன்றனா். பின்னா், கிரேன் மூலம் இரும்புக் கதவை அகற்றி, படுகாயமடைந்த நிலையில் இருந்த இருவரையும் மீட்டனா். எனினும், பால்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயம் அடைந்த ராமகிருஷ்ணன் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
இது குறித்து மாதவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.