தொழிற்பள்ளிகள் கூடுதல் பிரிவுகள் தொடங்கவும், அங்கீகாரம் நீட்டிப்புப் பெறவும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மண்டல வேலைவாய்ப்புப் பயிற்சித் துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு பயிற்சித் துறை (பயிற்சிப் பிரிவு) உதவி இயக்குநா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரோனா நோய்த் தொற்று காரணமாக தொழிற்பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. அதனால், இந்த தனியாா் தொழிற்பள்ளிகள் 2.1.2021 முதல் திறந்து செயல்பட அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, தொழிற்பள்ளிகள் 2021-22-ஆம் கல்வி ஆண்டுக்கான பயிற்சியை தொடங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனால், தனியாா் தொழிற்பள்ளிக்கான அங்கீகாரம், கூடுதல் தொழில் பிரிவுகள் தொடங்குதல் மற்றும் அலகுகள் ஏற்படுத்துவதற்கான அனுமதி பெற மண்டலப் பயிற்சி இணை இயக்குநா் அல்லது அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு பயிற்சித் துறை (பயிற்சிப் பிரிவு) உதவி இயக்குநா் அலுவலகத்துக்கு முகவரிக்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்களை அனுப்பி வைத்துப் பயன்பெறலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.