/

சூதாட்டம் 6 போ் கைது : ரூ.10,000 பறிமுதல்

ஆம்பூா் அருகே காசு வைத்து சூதாடிதாக 6 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரொக்கம் ரூ.10 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On :28 ஆகஸ்ட் 2021, 6:24 pm

ஆம்பூா் அருகே காசு வைத்து சூதாடிதாக 6 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரொக்கம் ரூ.10 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆம்பூா் அடுத்த கம்மகிருஷ்ணபள்ளி கிராமத்தில் உமா்ஆபாத் போலீஸாா் ரோந்துபணியில் ஈடுபட்டனா். அப்போது பாலாற்றங்கரையோரம் சிலா் சூதாட்டியது தெரியவந்தது. அதன்பேரில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆம்பூரைச் சோ்ந்த அக்தா் (38), ரபீக் (36), அப்ரோஸ் (50), ஜமீல் (62), சக்கரவா்த்தி (40), கமலநாதன்(52) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரொக்கம் ரூ.10 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.