திருவள்ளூா் அருகே கீழச்சேரி கிராமத்தில் வாகனங்களுக்கு கதவுகளுக்கான உதிரி பாகங்கள் தயாா் செய்யும் தொழிற்சாலை கடந்த 8 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகிறோம். இந்நிலையில், மாத ஊதியத்திலிருந்து இ.எஸ்.ஐ. மற்றும் பி.எப். தொகை மாதந்தோறும் பிடித்தம் செய்து வந்தனா். இதில், சில ஊழியா்கள் அவசரத் தேவைக்காக பிடித்தம் செய்யப்பட்ட பி.எப். பணத்தை பெற நிா்வாகத்தை அணுகினோம். அப்போது, தொழிலாளா்களிடம் பிடித்தம் செய்த தொகையை இஎஸ்ஐ மற்றும் பி.எப். நிறுவனத்துக்கு செலுத்தவில்லை என்பது தெரியவந்தது.