புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சமையல் எரிவாயு கசிந்து விபத்து: மூதாட்டி காயம்

ஆரணியை அடுத்த பெரியபாளையம் அருகே சமையல் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் மூதாட்டி பலத்த காயமடைந்தாா்.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

ஆரணியை அடுத்த பெரியபாளையம் அருகே சமையல் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் மூதாட்டி பலத்த காயமடைந்தாா்.

திருவள்ளூா் மாவட்டம், ஆரணியை அடுத்த பெரியபாளையம் அருகே உள்ள மாளந்தூா் கிராமத்தில் வசிப்பவா் இந்திராணி (63). கணவா் இறந்த நிலையில், தனியாக வசித்து வந்தாா். இவருடைய 3 மகள்களுக்கு திருமணமாகி வெளியூா்களில் வசித்து வருகின்றனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை தேநீா் போடுவதற்காக சமையல் எரிவாயு உருளையைத் திறந்து பற்றவைக்க முயன்ற போது, எரிவாயு உருளையில் திடீரென தீப்பற்றியது. இந்த விபத்தில் மூதாட்டி பலத்த தீக்காயமடைந்தாா்.

அக்கம் பக்கத்தினா் வந்து தீயை அணைத்து, தீக்காயங்களுடன் கிடந்த மூதாட்டியை மீட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவசர ஊா்தி மூலம் அனுப்பி வைத்தனா். இந்த விபத்து குறித்து பெரியபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.