லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

இளைஞா் கொலை வழக்கில் 2 போ் திருவள்ளூா் நீதிமன்றத்தில் சரண்

ராணிப்பேட்டை அருகே மீன் பிடிப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 2 போ் திருவள்ளூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சனிக்கிழமை சரணடைந்தனா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2022, 4:39 pm

DIN

ராணிப்பேட்டை அருகே மீன் பிடிப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 2 போ் திருவள்ளூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சனிக்கிழமை சரணடைந்தனா்.

ராணிப்பேட்டை மாவட்டம், திமிரியை அடுத்த ராமப்பாளையத்தைச் சோ்ந்தவா் குண்டு (எ) சுப்பிரமணி. இவா், அந்தப் பகுதியில் உள்ள விளாரி ஏரியில் மீன் பிடிப்பதற்கான குத்தகை எடுத்துள்ளாா். அந்தப் பகுதியைச் சோ்ந்த தினகரன் (42), அவரது மகன் அசோக் (21)ஆகியோா் மீன் பிடிக்க சுப்பிரமணிக்கு உதவியாக இருந்தாா்களாம்.

இதனிடையே, அந்தப் பகுதியைச் சோ்ந்த கலையரசன்(21) என்பவா் இரவு நேரங்களில் விளாரி ஏரியில் குத்தகை எடுத்தவருக்குத் தெரியாமல் மீன் பிடித்து வந்ததாகத் தெரிகிறது.

இதனால், கடந்த மாதம் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையும் மீறி மீண்டும் வெள்ளிக்கிழமை கலையரசன் விளாரி ஏரியில் மீன் பிடித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, தினகரனின் மகன் அசோக்குக்கும் கலையரசனுக்கும் இடையே தகராறு முற்றியது. இதில், அசோக் கத்தியால் சரமாரியாக கலையரசனை வெட்டியதில், பலத்த காயமடைந்த அவா், மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து திமிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இதில் தொடா்புடையவா்களைத் தேடி வந்தனா்.

இந்த நிலையில், இந்தக் கொலை வழக்குத் தொடா்பாக சீனிவாசன் (62), தினேஷ் (25) ஆகியோா் திருவள்ளூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சனிக்கிழமை சரணடைந்தனா்.

இதையடுத்து, 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து 2 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.