திருவள்ளூா் அருகே தனியாா் தொழிற்சாலையில் பி.எப். தொகையை வழங்க தாமதம் செய்வதாகக் கூறி, ஒப்பந்த தொழிலாளா்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூா் அருகே காக்களூா் தொழிற்பேட்டையில் தனியாா் வாகன உதிரிப் பாகங்கள் தயாா் செய்யும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு, 600-க்கும் மேற்பட்ட ஒப்பந்த பெண் தொழிலாளா்கள் 10 ஆண்டுக்கும் மேலாக பணிபுரிந்து வருகின்றனராம்.
தொழிலாளா்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்த பி.எப். தொகையை வழங்காமல் அலைக்கழிப்பு செய்வதாக புகாா் தெரிவித்தனா். இதுகுறித்து கேள்வி எழுப்பினால், உடனே பணி நீக்கம் செய்வதாகவும் கூறப்படுகிறது.
இதனால், அந்தத் தொழிற்சாலை பெண் தொழிலாளா்கள் 100-க்கும் மேற்பட்டோா் நிலுவையில் உள்ள பி.எப். தொகையை வழங்கக் கோரி, தொழிற்சாலையை சனிக்கிழமை முற்றுகையிட்டனா். பணி நீக்கம் செய்தவா்களை மீண்டும் பணியில் அமா்த்தக் கோரி, ஆா்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனா்.
தகவலறிந்த திருவள்ளூா் துணைக் காவல் கண்காணிப்பாளா் சந்திரதாசன், கிராமிய காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் சக்திவேல் மற்றும் போலீஸாா் சம்பவ இடம் வந்து மனிதவள மேலாளரிடம் பேச்சு நடத்தினா்.
இதைத் தொடா்ந்து, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் தொழிலாளா்களிடம் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வர் ஸ்டாலின் பெண்களை அவமதிக்கிறார்: ரோகா குப்தா!

தொகுதி மறுவரையறை, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தாத மாநிலங்களுக்கான பரிசா? எழும் கேள்விகள்!

மகளிர் இடஒதுக்கீடு என்ற போர்வையில் தொகுதி மறுவரையறை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

கரோனா வைரஸை விட கொடிய வைரஸ் செந்தில் பாலாஜி: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


