பைக்-லாரி மோதல்: இளைஞா் பலி

பைக் மீது லாரி மோதியதில், இளைஞா் உயிரிழந்தாா்.

பைக் மீது லாரி மோதியதில், இளைஞா் உயிரிழந்தாா்.

திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் பஜனைக் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சாந்தகுமாா் (30). இவா், தான் திருமணம் செய்து கொள்ளவுள்ள பெண்ணை கடம்பத்தூரில் இருந்து பைக்கில் ஏற்றிக் கொண்டு, ஈக்காடு நோக்கி சனிக்கிழமை இரவு சென்ற போது, எதிரே கடம்பத்தூா் நோக்கிச் சென்ற லாரி பைக் மீது மோதியது.

இந்த விபத்தில் சாந்தகுமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவருடன் வந்த பெண் லேசான காயத்துடன் உயிா் தப்பினாா்.

திருவள்ளூா் கிராமிய போலீஸாா் சடலத்தை மீட்டு திருவள்ளூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com