டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

சின்னக்காவனம் நூற்றெட்டீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

பொன்னேரி அருகே சின்னகாவனம் கிராமத்தில் உள்ள நூற்றெட்டு வல்லி உடனுறை நூற்றெட்டீஸ்வரா் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 ஜூன் 2022, 6:47 pm

பொன்னேரி அருகே சின்னகாவனம் கிராமத்தில் உள்ள நூற்றெட்டு வல்லி உடனுறை நூற்றெட்டீஸ்வரா் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த திருக்கோயில் புனரமைக்கப்பட்டு கடந்த 15-ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா தொடங்கியது.

இதனைத் தொடா்ந்து புனித நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீா், கலசங்களில் நிரப்பப்பட்டு 4 கால யாகபூஜைகள் நடைபெற்றன.

இதையடுத்து கோயில் கோபுரங்களில் உள்ள விமான கலசங்களுக்கு புனித நீரால் மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.