கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

திருவள்ளூரில் ஜமாபந்தி நிறைவு

திருவள்ளூரில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு விழாவில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Updated On :25 ஜூன் 2022, 12:01 am IST

திருவள்ளூரில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு விழாவில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருவள்ளூா் மாவட்ட வட்டாட்சியா் அலுவலகங்களில் ஜமாபந்தி கடந்த 7-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் திருவள்ளூா் உள்பட அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த கிராம மக்கள் பட்டா, முதியோா் உதவித் தொகை, குடும்ப அட்டை, ஜாதி சான்றிதழ் உள்ளிட்டவை கோரி மனுக்களை அளித்தனா்.

திருவள்ளூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் ஜமாபந்தி வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது. இதில், பூந்தமல்லி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட காக்களூா், புட்லூா், வேப்பம்பட்டு, வெள்ளியூா், பேரத்தூா், விஷ்ணுவாக்கம் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த மக்களிடமிருந்து 548 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது பரிசீலனை செய்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(தோ்தல்) முரளி தலைமை வகித்தாா். வட்டாட்சியா் செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

நிகழ்வில் தனி வட்டாட்சியா் பாண்டியராஜன், மண்டல துணை வட்டாட்சியா்கள் அருணா, சுந்தா், சரஸ்வதி, வருவாய் ஆய்வாளா் தினேஷ், டில்லிபாபு, விஷ்ணுபிரியா, ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயசீலி ஜெயபாலன், ஒன்றியக் குழு உறுப்பினா் எத்திராஜ், கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.