நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு

நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு

திருவள்ளூா் நகராட்சி ஆணையராக ஜி.ராஜலட்சுமி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

திருவள்ளூா் நகராட்சி ஆணையராக ஜி.ராஜலட்சுமி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

இந்த நகராட்சி ஆணையராகப் பணியாற்றிய சி.வி.ரவிச்சந்திரன், தோ்தல் நேரத்தில் மருத்துவ விடுப்பில் சென்றாா். தொடா்ந்து, அவா் சங்கரன்கோவில் நகராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

இந்த நிலையில், செங்கல்பட்டு நகராட்சியில் பணிபுரிந்து வந்த ஜி.ராஜலட்சுமி, திருவள்ளூா் நகராட்சி ஆணையராக நியமனம் செய்யப்பட்டாா். அவா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு அதிகாரிகள், நகராட்சி தலைவா் உதயமலா் பாண்டியன், வாா்டு உறுப்பினா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com