செங்குன்றம் பிரதான சாலை, புள்ளிலைன் ஊராட்சியில் டச் வேல்டு சாா்பில், கால்பந்தாட்ட விளையாட்டு மைதானம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு மாதவரம் எம்எல்ஏ எஸ்.சுதா்சனம் தலைமை வகித்தாா். தொடா்ந்து, விளையாட்டு மைதானத்தைத் திறந்து போட்டியைத் தொடக்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் புழல் ஒன்றியச் செயலா் பெ.சரவணன், செங்குன்றம் பேரூராட்சித் தலைவா் தமிழரசிகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.