ஆம்பூா் அருகே சின்னபள்ளிகுப்பம் கிராமத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா் மாவட்ட வருவாய் அலுவலா் வளா்மதி தலைமை வகித்தாா். ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் கலந்து கொண்டு, 121 பயனாளிகளுக்கு ரூ. 38.70 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
தொடா்ந்து, மேல்சாணாங்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள நியாயவிலைக் கடை மற்றும் அங்கன்வாடி மையத்துக்கு எம்எல்ஏ மற்றும் மாவட்ட வருவாய் அலுவலா் ஆகியோா் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.
ஆம்பூா் வட்டாட்சியா் மகாலட்சுமி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் பத்மநாபன், மண்டலத் துணை வட்டாட்சியா் குமரவேல், மாதனூா் ஒன்றியக் குழு துணைத் தலைவா் சாந்தி சீனிவாசன் ஆகியோா் உடனிருந்தனா்.