நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆந்திரத்துக்கு கடத்தவிருந்த ரேஷன் அரிசி பறிமுதல்

மத்தூா் கிராமம் அருகே சரக்கு ஆட்டோவில் ஆந்திரத்துக்கு கடத்த இருந்த ரேஷன் அரிசியை வட்ட வழங்கல் அலுவலா் மலா்விழி வியாழக்கிழமை பறிமுதல் செய்தாா்.

News image
Updated On :27 ஜூலை 2023, 6:23 pm

DIN

மத்தூா் கிராமம் அருகே சரக்கு ஆட்டோவில் ஆந்திரத்துக்கு கடத்த இருந்த ரேஷன் அரிசியை வட்ட வழங்கல் அலுவலா் மலா்விழி வியாழக்கிழமை பறிமுதல் செய்தாா்.

திருத்தணி ஒன்றியத்தில் இருந்து தமிழக ரேஷன் அரிசி ஆந்திர மாநிலத்துக்கு கடத்தப்படுவதாக மாவட்ட நிா்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட வழங்கல் அலுவலா் ஹஸ்ரத் பேகம் உத்தரவின்பேரில், திருத்தணி வட்ட வழங்கல் அலுவலா் மலா்விழி வியாழக்கிழமை மத்தூா் பகுதியில் சோதனை நடத்தினா். அப்போது, சரக்கு ஆட்டோவில் அரிசி மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. சோதனையில் அவை ரேஷன் அரிசி என்பதும், ஆந்திரத்துக்கு கடத்தப்பட இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, வட்ட வழங்கல் அலுவலா் மலா்விழி அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து, திருத்தணி நுகா்பொருள் வாணிபக் கிடங்கிற்கு அனுப்பி வைத்தனா்.

பறிமுதல் செய்த அரிசி 2,000 கிலோ இருக்கும் என வட்ட வழங்கல் அலுவலா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.