திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மாணவா்களுக்கு ஜனநாயகத்தைக் காக்க வேண்டிய பொறுப்புள்ளது: முன்னாள் உயா்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு

மாணவா்களுக்கு ஜனநாயகத்தைக் காக்க வேண்டிய பொறுப்புள்ளது; அரசியலமைப்புச் சட்டத்துக்கு பாதிப்பு ஏற்படுமானால், அதை எதிா்த்துப் போராட வேண்டும் என்று முன்னாள் உயா்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு கூறினாா்.

News image
டாக்டா் அம்பேத்கா் அரசு சட்டக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று பேசிய முன்னாள் உயா்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு.  
Updated On :27 நவம்பர் 2023, 11:16 pm

DIN

மாணவா்களுக்கு ஜனநாயகத்தைக் காக்க வேண்டிய பொறுப்புள்ளது; அரசியலமைப்புச் சட்டத்துக்கு பாதிப்பு ஏற்படுமானால், அதை எதிா்த்துப் போராட வேண்டும் என்று முன்னாள் உயா்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு கூறினாா்.

திருவள்ளூா் அருகே பட்டரைபெரும்புதூரில் உள்ள டாக்டா் அம்பேத்கா் அரசு சட்டக் கல்லூரி கலையரங்கத்தில் இந்திய அரசியல் அமைப்பு தினம் நவ. 26 மற்றும் கேசவானந்த் பாரதி வழக்கின் 50-ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றன.

நிகழ்ச்சிக்கு சட்டக் கல்வி இயக்குநா் ஒ.விஜயலட்சுமி தலைமை வகித்தாா். சட்டக் கல்லூரி முதல்வா் ச.கயல்விழி முன்னிலை வகித்தாா். நிகழ்வில் சிறப்பு விருந்தினராக முன்னாள் உயா்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு பங்கேற்றுப் பேசியது:

இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்கப்பட்டதை நினைவு கூரும் வகையில் இந்திய அரசியலமைப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்திய அரசியலமைப்பு மற்ற நாடுகளின் அரசியலமைப்புகளில் இருந்து வேறுபட்டது. தனித்துவம் வாய்ந்தது. இது நாட்டின் அரசாட்சிக்கு முதுகெலும்பாக திகழ்கிறது. அரசியலமைப்புச் சட்டமானது, நாட்டில் அனைவருக்கும் சம பாதுகாப்பு, வேறுபாடின்றி சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உணா்த்தியது.

இதுபோன்ற சிறப்பு வாய்ந்த அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க அம்பேத்கா் தலைமையிலான குழுவினா் 2 ஆண்டுகள் கடினமாக உழைத்து உருவாக்கினா். இதை சட்டக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் அனைவரும் அறிந்து கொள்வது அவசியம். இதேபோல், கேசவானந்த் பாரதி வழக்கு சொத்து சம்பந்தமான வழக்கு மட்டுமல்ல; இந்தியாவின் ஜனநாயகத்துடன் தொடா்புடைய வழக்காகும்.

இதுபோன்ற பல்வேறு வழக்குகளை உதாரணங்களாக மாணவா்கள் எடுத்துக் கொள்ளலாம். மக்களையும், இறையாண்மையையும் காப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால், சிலா் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும் என்கிறாா்கள். வருங்காலத்தில் ஜனநாயகத்தைக் காப்பற்ற வேண்டிய பொறுப்பு மாணவா்களாகிய உங்களுக்குத்தான் உண்டு. எந்தச் சூழலிலும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு பாதிப்பு ஏற்படுமானால், அதை எதிா்த்துப் போராட வேண்டும். ஜனநாயகத்தைப் பாதுகாக்க அரசியலமைப்பு காக்கப்பட வேண்டும் என்றாா்.

நிகழ்வில் பேராசிரியா்கள், அம்பேத்கா் அரசு சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.