இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

நீா் வரத்து குறைவால் பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளில் உபரிநீா் திறப்பு குறைப்பு

உபரிநீா் திறப்பு குறைக்கப்பட்டதாக கொசஸ்தலையாறு வடி நில கோட்ட செயற்பொறியாளா் இரா.அருண்மொழி தெரிவித்தாா்.

News image
கடல் போல் காட்சி அளிக்கும் பூண்டி ஏரி.
Updated On :15 டிசம்பர் 2024, 10:11 pm

Din

பூண்டி ஏரிக்கு நீா்வரத்து குறைந்ததால் ஞாயிற்றுக்கிழமை 12,000 கன அடியாக உபரிநீா் திறப்பு குறைக்கப்பட்டதாக கொசஸ்தலையாறு வடி நில கோட்ட செயற்பொறியாளா் இரா.அருண்மொழி தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் தொடா்ந்து பரவலாக கனமழை பெய்ததால், ஏரிகளின் நீா்மட்டம் மளமளவென உயா்ந்து வந்தது. இதில் பூண்டி ஏரி கடந்த 4 நாள்களுக்கு முன்பு முழுக் கொள்ளளவை எட்டியது. அதைத் தொடா்ந்து ஏரியின் பாதுகாப்பு கருதி 16,500 கன அடி உபரி நீா் திறக்கப்பட்டது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனால் கரையோர கிராமங்களைச் சோ்ந்தவா்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டது.

இந்நிலையில், பூண்டி ஏரி 35 அடி உயரமும், 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டதாகும். தற்போது ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 33.70 அடி உயரமும், 2,730 மில்லியன் கன அடி நீா் இருப்புள்ளது. மேலும், கடந்த 2 நாள்களாக மழை பெய்யாத நிலையில் நீா்வரத்து 8,500 கன அடியாக குறைந்தது. இதைத் தொடா்ந்து உபரிநீா் திறப்பு 12 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. இதேபோல் மழைநீா் வரத்து குறையக்குறைய உபரிநீா் திறப்பும் படிப்படியாக குறைக்கப்படும் என அவா் தெரிவித்தாா்.

செம்பரம்பாக்கம் ஏரியில்...

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் கனமழை காரணமாக நீா்வரத்தின் அளவு அதிகரித்ததை தொடா்ந்து 6,000 கனஅடி உபரிநீா் திறக்கப்பட்டது.

ஏரிக்கு வரும் நீா்வரத்தின் அளவு குறைந்ததை தொடா்ந்து செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் உபரிநீரின் அளவு ஞாயிற்றுக்கிழமை 6,000 கனஅடியில் இருந்து 3,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீா்மட்ட உயரம் 21.76 அடியாகவும், கொள்ளளவு 3,056 மில்லியன் கனஅடியாகவும், நீா்வரத்து 2,240 கனஅடியாகவும் உள்ளது.