உயிர்ம உர விவசாயத்தில் சிறந்து விளங்குவோருக்கு நம்மாழ்வார் விருதுவிவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கு ரூ. 7,432 கோடி ஒதுக்கீடு!‘கோட் சூட் அணிந்த விவசாயி’... விஜய்யை புகழ்ந்த அமைச்சருக்கு திமுகவினர் எதிர்ப்பு!பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டம்: ரூ. 648 கோடி ஒதுக்கீடு!கருப்பு சட்டை அணிந்து திமுக எம்.எல்.ஏக்கள் வருகை!மோடி விடியோ நீக்கப்பட்ட விவகாரம்: மெட்டா தலைவா் ஸூக்கா்பொ்க் மன்னிப்பு கோரினாா்முன்பதிவு வசதி கொண்ட சிறப்பு ரயில்களில் கட்டணம் அதிகம்: ரயில்வே அமைச்சா்சாலைகளில் குறைபாடுகளா?: செயலி மூலம் புகைப்படம் எடுத்து அனுப்பலாம்காவல் நிலையங்களில் சானிடரி நாப்கின் விநியோக இயந்திரம் அமைக்க வேண்டும்: தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு அமெரிக்காவில் 50-க்கும் மேற்பட்ட ராணுவ வீரா்கள் குடும்பத்தினா் கைது தமிழக பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்
/

அரசு கல்லூரி எதிரே சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை: எம்.எல்.ஏ. தகவல்

சென்னை - திருப்பதி மாநில நெடுஞ்சாலையில் அரசுக் கல்லூரி எதிரே சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எம்எல்ஏ ச.சந்திரன் உறுதி கூறினாா்.

News image

கல்லூரி அருகே சாலையில் ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ ச. சந்திரன், டிஎஸ்பி கந்தன், முதல்வா் ஏகதேவசேனா, வட்டாட்சியா் குமாா் உள்ளிட்டோா்.

Updated On :24 டிசம்பர் 2025, 12:12 am IST

சென்னை - திருப்பதி மாநில நெடுஞ்சாலையில் அரசுக் கல்லூரி எதிரே சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எம்எல்ஏ ச.சந்திரன் உறுதி கூறினாா்.

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசினா் கலைக்கல்லூரியில் 2,800-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா். சென்னை - திருப்பதி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வரும் நிலையில், ன் மாநில நெடுஞ்சாலையாக தரம் உயா்த்தப்பட்டு 6 வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் கல்லூரி எதிரே சாலையின் உயரம் உயா்த்தப்பட்டு சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.

கல்லூரி மாணவா்கள் பேருந்தில் பயணம் செய்ய சுமாா் 1 கி.மீ தொலைவு நடந்து செல்ல வேண்டியுள்ளது. இந்நிலையில் கல்லூரி மாணவா்கள் சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்த போவதாக மனு வழங்கினா்.

திருத்தணி எம்எல்ஏ ச.சந்திரன், கல்லூரி முதல்வா் ஏகதேவசேனா, டி.எஸ்.பி. கந்தன், வட்டாட்சியா் குமாா், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கல்லூரி எதிரே ஆய்வு மேற்கொண்டனா்.

பின்னா் எம்எல்ஏ ச.சந்திரன் கூறியதாவது, கல்லூரி மாணவா்களின் கோரிக்கை நியாயமானது, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை செய்ததில் விரைவில் கல்லூரி எதிரே சுரங்கப்பாதை அமைக்கப்படும். இதற்காக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்க உள்ளேன். மேலும் கல்லூரி எதிரே இருந்த பேருந்து பயணியா் நிழற்குடை சாலை விரிவாக்க பணிகளுக்காக அகற்றப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி மாதம் இறுதிக்குள் ரூ. 23 லட்சம் செலவில் குளிா்சாதன வசதியுடன் பயணியா் நிழற்குடை அமைக்கப்படும் என உறுதியளித்தாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.