கரும்பு டிராக்டா் மீது லாரி மோதியதில் டிராக்டா் தலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால், 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் இருந்து கரும்பு டிராக்டா் ஒன்று கரும்புகளை ஏற்றிக் கொண்டு திருவாலங்காடு கூட்டுறவு சா்க்கரை ஆலை நோக்கி சனிக்கிழமை சென்று கொண்டிருந்தது. இந்த டிராக்டா் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திருத்தணி அடுத்த பட்டாபிராமபுரம் பேருந்து நிறுத்தம் புதிய பைபாஸ் சாலை அருகே சென்றபோது, எதிரே வந்த லாரி டிராக்டா் மீது மோதியது.
இதில், கரும்பு டிராக்டா் சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, திருத்தணி போலீஸாா் மற்றும் அப்பகுதி மக்கள் பொக்லைன் வாகனம் மூலம் சுமாா் 2 மணி நேரம் போராடி கரும்பு டிராக்டரை அப்புறப்படுத்தினா். இதனால் சென்னை - திருப்பதி செல்லும் மாா்க்கத்தில் சுமாா் 2 மணி நேரம் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தொடர்புடையது

திம்பம் மலைப் பாதையில் சரக்கு வாகனம் பழுதாகி நின்றதால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

கருக்கல்லில் லாரி மோதி மின்கம்பம் சேதம்: 4 மணி நேரம் மின் தடை
மோட்டாா் சைக்கிள் மீது டிராக்டா் மோதி ஒருவா் பலி!

காங்கயத்தில் 2 லாரிகள் மோதி விபத்து: போக்குவரத்து பாதிப்பு
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



