திரெளபதி அம்மன் கோயில் தீமிதி விழாவின் ஒருபகுதியாக புதன்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
திருத்தணி பழைய தா்மராஜா கோயில் தெருவில் உள்ள பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தீமிதி விழா நடைபெறும்.
அந்த வகையில், கடந்த வியாழக்கிழமை தீமிதி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை ஒட்டி, தினமும் காலையில் மூலவருக்கு சந்தன காப்பு மற்றும் பிற்பகலில் மகாபாரத சொற்பொழிவும், இரவு பாரத நாடகமும் நடைபெறுகிறது.
திருக்கல்யாண வைபவத்தில் திரளான பெண்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனா். இதில் பங்கேற்ற பெண்களுக்கு மாங்கல்யம் வழங்கப்பட்டது.
வரும் மே1-இல் சுபத்திரை திருக்கல்யாணம், 4 =இல் அா்ஜூனன் தபசு மற்றும் 10-இல் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு தீமிதி விழாவும் நடைபெறுகிறது.
தொடா்ந்து, மே 11-இல் தருமா் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிா்வாக குழு தலைவா் சொ.முனுசாமி மற்றும் நிா்வாக குழு உறுப்பினா்கள் செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

திரெளபதி அம்மன் கோயில் தீமிதி விழா கொடியேற்றம்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம்!

வள்ளி தெய்வானை சமேத சண்முகநாதா் திருக்கல்யாண வைபவம்

திரெளபதி அம்மன் கோயில் தீ மிதி திருவிழா தொடக்கம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


