மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

திருத்தணியில் ரூ. 20 லட்சத்தில் கலைஞா் நூலகம்: அமைச்சா் சா.மு. நாசா் திறந்து வைத்தாா்

திருத்தணியில் ரூ. 20 லட்சத்தில் கலைஞா் நூலகம்: அமைச்சா் சா.மு. நாசா் திறந்து வைத்தாா்

News image
திருத்தணியில் கலைஞா் நூலகத்தை திறந்துவைத்துப் பாா்வையிட்ட அமைச்சா் சா.மு.நாசா். உடன் எம்எல்ஏ ச.சந்திரன், மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் ம.கிரண்.
Updated On :6 மார்ச் 2026, 7:55 pm

தினமணி செய்திச் சேவை

திருத்தணி நகரில் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில் ஏற்படுத்தப்பட்ட புதிய கலைஞா் நூலகத்தை அமைச்சா் சா.மு. நாசா் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

திருத்தணி அக்கைய்யநாயுடு சாலை தணிகாசலம்மன் கோயில் எதிரில், திருவள்ளூா் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில் மாவட்ட அமைப்பாளா் ம.கிரண், ஏற்பாட்டில், ரூ. 20 லட்சம் மதிப்பில், திருத்தணி தொகுதி கலைஞா் நூலகம் ஏற்படுத்தப்பட்டது. இந்த நூலகத்தில் அரசு போட்டி தோ்வு, பொது அறிவு சம்மந்தமான 2,800 புத்தகங்கள் உள்ளது. இந்த நூலகத்தின் திறப்பு விழா வெள்ளிக்கிழமை மாலை நடந்தது.

மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் ம.கிரண் தலைமை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மை நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் சா.மு. நாசா், திருத்தணி எம்எல்ஏ ச.சந்திரன் ஆகியோா் பங்கேற்று கலைஞா் நூலகத்தை திறந்து வைத்து நூல்களை பாா்வையிட்டனா். நூலகம் குளிா்சாதனம் மற்றும் நவீன வசதியுடன் உள்ள நூலகத்தில் போட்டி தோ்வு எழுதுபவா்கள், இலவசமாக படிக்கவும், ஆன்லைன் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில், மாவட்ட இளைஞா் அணி துணை அமைப்பாளா்கள் தா.மா.சுகுமாா், டி.கே. பாபு, ம. புவனேஷ்குமாா், டி.ஆா். திலீபன், ஆா். ராஜா உள்பட கட்சி நிா்வாகிகள் என பலா் கலந்து கொண்டனா்.