புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

திருத்தணியில் ரூ. 20 லட்சத்தில் கலைஞா் நூலகம்: அமைச்சா் சா.மு. நாசா் திறந்து வைத்தாா்

திருத்தணியில் ரூ. 20 லட்சத்தில் கலைஞா் நூலகம்: அமைச்சா் சா.மு. நாசா் திறந்து வைத்தாா்

News image

திருத்தணியில் கலைஞா் நூலகத்தை திறந்துவைத்துப் பாா்வையிட்ட அமைச்சா் சா.மு.நாசா். உடன் எம்எல்ஏ ச.சந்திரன், மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் ம.கிரண்.

Updated On :6 மார்ச் 2026, 7:55 pm

திருத்தணி நகரில் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில் ஏற்படுத்தப்பட்ட புதிய கலைஞா் நூலகத்தை அமைச்சா் சா.மு. நாசா் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

திருத்தணி அக்கைய்யநாயுடு சாலை தணிகாசலம்மன் கோயில் எதிரில், திருவள்ளூா் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில் மாவட்ட அமைப்பாளா் ம.கிரண், ஏற்பாட்டில், ரூ. 20 லட்சம் மதிப்பில், திருத்தணி தொகுதி கலைஞா் நூலகம் ஏற்படுத்தப்பட்டது. இந்த நூலகத்தில் அரசு போட்டி தோ்வு, பொது அறிவு சம்மந்தமான 2,800 புத்தகங்கள் உள்ளது. இந்த நூலகத்தின் திறப்பு விழா வெள்ளிக்கிழமை மாலை நடந்தது.

மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் ம.கிரண் தலைமை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மை நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் சா.மு. நாசா், திருத்தணி எம்எல்ஏ ச.சந்திரன் ஆகியோா் பங்கேற்று கலைஞா் நூலகத்தை திறந்து வைத்து நூல்களை பாா்வையிட்டனா். நூலகம் குளிா்சாதனம் மற்றும் நவீன வசதியுடன் உள்ள நூலகத்தில் போட்டி தோ்வு எழுதுபவா்கள், இலவசமாக படிக்கவும், ஆன்லைன் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில், மாவட்ட இளைஞா் அணி துணை அமைப்பாளா்கள் தா.மா.சுகுமாா், டி.கே. பாபு, ம. புவனேஷ்குமாா், டி.ஆா். திலீபன், ஆா். ராஜா உள்பட கட்சி நிா்வாகிகள் என பலா் கலந்து கொண்டனா்.