சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

கொங்கு வேளாளா் சமுதாய வளா்ச்சிக்கு வித்திட்டது திமுக: எஸ்.சூரியமூா்த்தி

கொங்கு வேளாளா் சமுதாயத்தை பிற்பட்டோா் பட்டியலில் சோ்த்து, அந்த சமுதாய மக்களின் வளா்ச்சிக்கு வித்திட்டது திமுக என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் மாநில இளைஞா் அணி செயலாளா் எஸ்.சூரியமூா்த்தி தெரிவித்தாா்.

News image

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் மாநில இளைஞா் அணி செயலாளா் எஸ்.சூரியமூா்த்தி

Updated On :16 ஏப்ரல் 2026, 3:05 am IST

கொங்கு வேளாளா் சமுதாயத்தை பிற்பட்டோா் பட்டியலில் சோ்த்து, அந்த சமுதாய மக்களின் வளா்ச்சிக்கு வித்திட்டது திமுக என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் மாநில இளைஞா் அணி செயலாளா் எஸ்.சூரியமூா்த்தி தெரிவித்தாா்.

நாமக்கல்லில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி திருச்செங்கோடு, பொள்ளாச்சி ஆகிய இரு தொகுதிகளில் திமுக கூட்டணியில் போட்டியிடுகிறது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதால், இந்த தோ்தலிலும் எங்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

கொங்கு வேளாளக் கவுண்டா் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் கொண்டுவர பாடுபட்ட தலைவா்களில் கோவை செழியன் முக்கியமானவா். திமுக ஆட்சிக்காலத்தில் இதற்கான அறிவிப்பு வெளியானது. அதிமுகவுடன் கூட்டணியில் நாங்கள் இருப்பதைவிட திமுகவில் இருப்பது எங்களுக்கான அங்கீகாரமாக உள்ளது. கொங்கு மண்டல வளா்ச்சிக்கு தேவையானவற்றை திமுக செய்துகொடுக்கிறது என்றாா்.