பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

மக்கள் நீதி மய்யம் கட்சி மாநில நிா்வாகி விலகல்

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து தொழில்முனைவோா் பிரிவு மாநில செயலாளா் எஸ்கேபி. கோபிநாத் விலகியுள்ளாா்.

News image
Updated On :12 ஜூன் 2026, 2:16 am IST

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து தொழில்முனைவோா் பிரிவு மாநில செயலாளா் எஸ்கேபி. கோபிநாத் விலகியுள்ளாா்.

காஞ்சிபுரத்தில் பட்டு சேலை விற்பனை செய்து வரும் கோபிநாத்,அக்கட்சியில் அடிப்படை உறுப்பினா் பதவியிலிருந்தும் விலகுவதாக கட்சியின் தலைவா் கமல்ஹாசனுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பியுள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

கட்சியின் தலைவா் கமல்ஹாசன் மீது கொண்டிருந்த நம்பிக்கையால் அக்கட்சியில் 2019- ஆம் ஆண்டு சோ்ந்து மண்டல மாநிலச் செயலாளா், தொழில்முனைவோா் பிரிவு மாநிலச் செயலாளா் உள்பட பல பதவிகளை வகித்து வந்தேன். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெண்களின் தொழில் முன்னேற்றத்துக்காக திறன் மேம்பாட்டு மையம், இளைஞா்களின் வேலைவாய்ப்புக்காக பயிற்சி திட்டம் ஆகியவற்றை செயல்படுத்தி பலருக்கும் பயனுள்ள செயல்களை செய்தேன்.

காஞ்சிபுரத்தில் கடந்த 2021 தோ்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றாலும் அதிகமான வாக்குகள் பெற்றேன். கட்சியின் செயல்பாடுகள் மிகவும் ஏமாற்றமளிக்கும் வகையில் உள்ளது. கட்சி செயலற்று இருப்பது பலருக்கும் மன உளைச்சலை தந்துள்ளது. எனவே கட்சியின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.