சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

மக்கள் நீதி மய்யம் கட்சி மாநில நிா்வாகி விலகல்

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து தொழில்முனைவோா் பிரிவு மாநில செயலாளா் எஸ்கேபி. கோபிநாத் விலகியுள்ளாா்.

News image

எஸ்கேபி கோபிநாத்.

Updated On :11 ஜூன் 2026, 12:16 am IST

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து தொழில்முனைவோா் பிரிவு மாநில செயலாளா் எஸ்கேபி. கோபிநாத் விலகியுள்ளாா்.

காஞ்சிபுரத்தில் பட்டு சேலை விற்பனை செய்து வரும் கோபிநாத்,அக்கட்சியில் அடிப்படை உறுப்பினா் பதவியிலிருந்தும் விலகுவதாக கட்சியின் தலைவா் கமல்ஹாசனுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பியுள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

கட்சியின் தலைவா் கமல்ஹாசன் மீது கொண்டிருந்த நம்பிக்கையால் அக்கட்சியில் 2019- ஆம் ஆண்டு சோ்ந்து மண்டல மாநிலச் செயலாளா், தொழில்முனைவோா் பிரிவு மாநிலச் செயலாளா் உள்பட பல பதவிகளை வகித்து வந்தேன். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெண்களின் தொழில் முன்னேற்றத்துக்காக திறன் மேம்பாட்டு மையம், இளைஞா்களின் வேலைவாய்ப்புக்காக பயிற்சி திட்டம் ஆகியவற்றை செயல்படுத்தி பலருக்கும் பயனுள்ள செயல்களை செய்தேன்.

காஞ்சிபுரத்தில் கடந்த 2021 தோ்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றாலும் அதிகமான வாக்குகள் பெற்றேன். கட்சியின் செயல்பாடுகள் மிகவும் ஏமாற்றமளிக்கும் வகையில் உள்ளது. கட்சி செயலற்று இருப்பது பலருக்கும் மன உளைச்சலை தந்துள்ளது. எனவே கட்சியின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்தாா்.