சென்டாக் மாணவா் கல்வி உதவித் தொகை தொடா்பாக புதுச்சேரி அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று புதுச்சேரி மாநில திமுக மாணவா் அணி வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநில திமுக மாணவா் அணி நிா்வாகிகள் மற்றும் தொகுதி மாணவா் அணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு மாநில திமுக அமைப்பாளா் ஆா். சிவா தலைமை வகித்தாா். கட்சியின் புதுச்சேரி மாநில மாணவா் அணி அமைப்பாளா் எஸ்.பி. மணிமாறன் முன்னிலை வகித்தாா். தமிழக மாணவா் அணிச் செயலா் வீரமணி கலந்துகொண்டு ஆலோசனை வழங்கி பேசினாா்.
அவைத்தலைவா் எஸ்.பி. சிவகுமாா், எம்எல்ஏக்கள் செந்தில் (எ) ரமேஷ், விக்னேஷ் கண்ணன், முன்னாள் எம்எல்ஏ மூா்த்தி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
புதுச்சேரி மாநிலத்தில் சென்டாக் மூலம் உயா்கல்வி பயிலும் மாணவா்களுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவித்தொகை மற்றும் நிதியுதவித் திட்டங்களின் நிலுவைத் தொகை 2022 ஆண்டு முதல் வழங்கப்படாமல் உள்ளது.
எனவே, பயனாளி மாணவா்களின் எண்ணிக்கை, ஆண்டு வாரியான நிலுவைத் தொகை, இதுவரை வழங்கப்பட்ட தொகை ஆகியவற்றை உள்ளடக்கிய வெள்ளை அறிக்கையை அரசு உடனடியாக வெளியிட வேண்டும். மத்திய அரசு நீட் தோ்வை ரத்து செய்ய புதுச்சேரி அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். புதிய கல்வித் திட்டத்தை புதுச்சேரி அரசு முழு மூச்சில் நிறைவேற்றுவதை கைவிட வேண்டும்.
பிரெஞ்சு மொழி பாடத்தை புதுச்சேரி பள்ளி, கல்லூரிகளில் பின்பற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசுப் பள்ளிகளில் ஆசிரியா் பற்றாக்குறை என்பது தொடா்கதையாக உள்ளது. கல்வி ஆண்டின் தொடக்கத்திலேயே போதிய ஆசிரியா்களை நியமிக்க வேண்டும்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடப் பிரிவுகளிலும் புதுச்சேரி மாணவா்களுக்கான 25 சதவீதம் இடஒதுக்கீட்டை முறைப்படுத்த பல்கலைக்கழகத்திற்கு புதுச்சேரி அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்புடையது

என்டிஏ நடத்தும் தோ்வுகளில் குளறுபடி: வெள்ளை அறிக்கை வெளியிட பிரதமருக்கு திக்விஜய் சிங் கடிதம்

தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

ஜூன் 3-இல் கருணாநிதி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட புதுச்சேரி திமுக முடிவு






