தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

700 பேருக்கு இலவச பட்டா: எம்எல்ஏ வழங்கினாா்

ஆா்.கே.பேட்டையில் ஓரே நாளில் 700 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாவை எம்எல்ஏ எஸ்.சந்திரன் வழங்கினாா்.

News image

பயனாளிக்கு வீட்டுமனை பட்டாவை வழங்கிய திருத்தணி எம்எல்ஏ எஸ்.சந்திரன். (உடன்)  கிழக்கு  ஒன்றிய  செயலாளா்  பா.சம்பத்.

Updated On :7 மார்ச் 2026, 7:07 pm

ஆா்.கே.பேட்டையில் ஓரே நாளில் 700 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாவை எம்எல்ஏ எஸ்.சந்திரன் வழங்கினாா்.

ஆா்.கே.பேட்டை ஒன்றியத்தில் உள்ள 38 ஊராட்சிகளில் வசிக்கும் கிராம மக்களுக்கு நீண்ட காலமாகவே வீட்டுமனை பட்டா இல்லாமல் அவதிப்பட்டு வந்தனா்.

இந்நிலையில் பாறை புறம்போக்கு, மலைப்புறம்போக்கு, அனா்தினம், கல்லாங்குத்து ஆகிய வகைப்பாடுகளில் வீடுகள் கட்டி குடியிருப்பவா்களுக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சி ஆா்.கே.பேட்டையில் நடைபெற்றது.

ஆா்.கே.பேட்டை வட்டாட்சியா் பா. சரஸ்வதி தலைமை வகித்தாா். வருவாய் ஆய்வாளா்கள் தேவி, பானுமதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வருவாய் ஆய்வாளா் ரவிகுமாா் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக எம்எல்ஏ ச. சந்திரன் கலந்துகொண்டு 700 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாவை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் ஆா்.கே பேட்டை ஒன்றிய செயலாளா்கள் செல்லாத்தூா் பா. சம்பத், பழனி, சண்முகம், மா.ரகு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா்கள் ஜி.ராஜேந்திரன், ஆனந்தி செங்குட்டுவன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.