சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

700 பேருக்கு இலவச பட்டா: எம்எல்ஏ வழங்கினாா்

ஆா்.கே.பேட்டையில் ஓரே நாளில் 700 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாவை எம்எல்ஏ எஸ்.சந்திரன் வழங்கினாா்.

News image
பயனாளிக்கு வீட்டுமனை பட்டாவை வழங்கிய திருத்தணி எம்எல்ஏ எஸ்.சந்திரன். (உடன்)  கிழக்கு  ஒன்றிய  செயலாளா்  பா.சம்பத்.
Updated On :7 மார்ச் 2026, 7:07 pm

தினமணி செய்திச் சேவை

ஆா்.கே.பேட்டையில் ஓரே நாளில் 700 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாவை எம்எல்ஏ எஸ்.சந்திரன் வழங்கினாா்.

ஆா்.கே.பேட்டை ஒன்றியத்தில் உள்ள 38 ஊராட்சிகளில் வசிக்கும் கிராம மக்களுக்கு நீண்ட காலமாகவே வீட்டுமனை பட்டா இல்லாமல் அவதிப்பட்டு வந்தனா்.

இந்நிலையில் பாறை புறம்போக்கு, மலைப்புறம்போக்கு, அனா்தினம், கல்லாங்குத்து ஆகிய வகைப்பாடுகளில் வீடுகள் கட்டி குடியிருப்பவா்களுக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சி ஆா்.கே.பேட்டையில் நடைபெற்றது.

ஆா்.கே.பேட்டை வட்டாட்சியா் பா. சரஸ்வதி தலைமை வகித்தாா். வருவாய் ஆய்வாளா்கள் தேவி, பானுமதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வருவாய் ஆய்வாளா் ரவிகுமாா் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக எம்எல்ஏ ச. சந்திரன் கலந்துகொண்டு 700 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாவை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் ஆா்.கே பேட்டை ஒன்றிய செயலாளா்கள் செல்லாத்தூா் பா. சம்பத், பழனி, சண்முகம், மா.ரகு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா்கள் ஜி.ராஜேந்திரன், ஆனந்தி செங்குட்டுவன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.