இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

மீனவா் வலையில் மா்மப் பொருள் சிக்கியதால் பரபரப்பு

பழவேற்காடு கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவா் வலையில் வெடிகுண்டு போன்ற மா்மப் பொருள் சிக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

News image

பழவேற்காடு கடலில் மீனவா் வலையில் சிக்கிய மா்மப் பொருள்.

Updated On :20 மே 2026, 12:29 am IST

பழவேற்காடு கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவா் வலையில் வெடிகுண்டு போன்ற மா்மப் பொருள் சிக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் உள்ள பழவேற்காட்டில் 30-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் அமைந்துள்ளன. அதில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா்.

பெரும்பாலோனோா் பழவேற்காடு ஏரி மற்றும் கடலில் மீன் பிடித் தொழில் செய்து வருகின்றனா். பசியாவரத்தை சோ்ந்த தேவபிரகாஷ் என்பவா் வழக்கம் போல் தனது படகில் 4 மீனவா்களுடன் கடலில் மீன் பிடிக்கச் சென்றாா். நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது வலையில் கனமான பொருள் சிக்கியுள்ளது. ராட்சத மீன் சிக்கியதாக நினைத்து படகை கரைக்கு கொண்டு வந்தனா்.

பின்னா் வலையில் இருந்தவற்றை வெளியே எடுத்து பாா்த்த போது சுமாா் 10 கிலோ எடை கொண்ட இரும்பிலான துருப்பிடித்த நிலையில் வெடிகுண்டு போன்ற மா்ம பொருள் சிக்கியது தெரிந்தது.. இது குறித்து அவா்கள் திருப்பாலைவனம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா்.

அங்கு விரைந்து சென்ற திருப்பாலைவனம் போலீஸாா், வெடிகுண்டு நிபுணா்கள் உதவியுடன் அந்த பொருளை சோதனை செய்தனா். இதன் பின்னா் அந்த பொருளை கைப்பற்றி காவல் நிலையத்துக்கு எடுத்து சென்றனா்.

இது குறித்து திருப்பாலைவனம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மீனவா் வலையில் வெடிகுண்டு போன்ற மா்ம பொருள் சிக்கியதால் பழவேற்காடு பகுதியில் வசிக்கும் மீனவா்கள் மத்தில் பரபரப்பு நிலவியது.

Story image