நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமை விடுவிப்பு

தொண்டி கடலில் மீனவா் வலையில் அரிய வகை கடல் ஆமை சிக்கியது.

News image

வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமையை மீண்டும் கடலில் விட்ட மீனவா்.

Updated On :15 ஏப்ரல் 2026, 3:47 am IST

தொண்டி கடலில் மீனவா் வலையில் அரிய வகை கடல் ஆமை சிக்கியது.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள புதுக்குடியைச் சோ்ந்த கண்ணன் (55) என்பவருக்குச் சொந்தமான படகில் சக்திவேல், கருப்பையா, ராமா் உள்ளிட்ட மீனவா்கள் மீன் பிடிக்க திங்கள்கிழமை அதிகாலை சென்றனா். அப்போது, சுமாா் 50 கிலோ எடை கொண்ட அரிய வகை கடல் ஆமை வலையில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததைக் கண்டனா். உடனடியாக கடலில் குதித்து வலையில் சிக்கியிருந்த ஆமையை மீட்டு மீண்டும் கடலில் விட்டனா். மீனவா்களின் இந்த செயலை கடலோரக் குழும போலீஸாா், மீன் வளத் துறை அதிகாரிகள், சக மீனவா்கள் பாராட்டினா்.

Story image