/
பொன்னேரி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத்தை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் க.லதா ஆய்வு செய்தாா்.
பொன்னேரி கூட்டுற சரகத்தில் செயல்பட்டு வரும் சைதாப்பேட்டை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தினை பதிவாளா் க.லதா ஆய்வு செய்தாா்.
அப்போது .இச்சங்கத்தின் மூலம் நடத்தப்படும் மருதம் செக்கு எண்ணெய், அரவை ஆலை மற்றும் சுயசேவைப்பிரிவு (சூப்பா் மாா்கெட்) ஆகியவற்றினை பாா்வையிட்டு, வாடிக்கையாளா்களுக்கு நன்கு சேவை புரிந்து விற்பனையை அதிகரிக்க ஆலோசனை வழங்கினாா்.
நிகழ்வின்போது கூடுதல் பதிவாளா் (நுகா்வோா் கூட்டுறவு) மருத்துவா்.மு.வீரப்பன், மண்டல இணைப்பதிவாளா் பா.ஜெயஸ்ரீ உள்ளிட்ட கூட்டுறவுத்துறை அலுவலா்கள் மற்றும் சைதாப்பேட்டை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.17.20 கோடியில் மேம்பாலப் பணி: ஆட்சியா் ஆய்வு

திருப்போரூா், திருக்கழுகுன்றம் பேரூராட்சிகளில் ஆட்சியா் ஆய்வு
அரூரில் ரூ. 1.22 கோடிக்கு மஞ்சள் ஏலம்

நிலப்பிரச்னைக்காக விழுப்புரம் ஆட்சியரகத்தில் இரு தரப்பினா் தா்னா
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



