விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அரூரில் ரூ. 1.22 கோடிக்கு மஞ்சள் ஏலம்

அரூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மற்றும் வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 1.22 கோடிக்கு மஞ்சள் விற்பனை நடைபெற்றது.

News image

மஞ்சள்

Updated On :1 மணி நேரம் முன்பு

அரூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மற்றும் வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 1.22 கோடிக்கு மஞ்சள் விற்பனை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், அரூரில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வாரந்தோறும் மஞ்சள் மூட்டைகள் ஏலம்விடப்படுகிறது. அதன்படி, மே 8 ஆம் தேதி நடைபெற்ற ஏலத்தில் விரலி மஞ்சள் குவிண்டால் அதிகபட்சம் ரூ. 14,939 க்கும், குறைந்தபட்சம் ரூ.13,033க்கும் விற்பனையானது. உருண்டை மஞ்சள் குவிண்டால் அதிகபட்சம் ரூ. 13,199க்கும், குறைந்தபட்சம் ரூ. 11,099க்கும் விற்பனையானது.

இதேபோல அரூா் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்திலும் மஞ்சள் மூட்டைகள் விற்பனையானது. அரூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மொத்தம் ரூ. 1.22 கோடிக்கு மஞ்சள் மூட்டைகள் விற்பனை நடைபெற்ாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.