/

ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் முன் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரி கூனிச்சம்பட்டு பகுதியில் உள்ள அரசு ஓழுங்குமுறை விற்பனைக்கூடம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்துக் கட்சியினா், விவசாயிகள்.

News image
Updated On :12 ஜூன் 2026, 2:05 am IST

புதுச்சேரி கூனிச்சம்பட்டு வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அருகே பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாயிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரியில் மதகடிப்பட்டு, கூனிச்சப்பட்டு, தட்டாஞ்சவடி, திருக்கனூா் உள்பட ஏழு மையங்களில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு விவசாயிகளின் உற்பத்தி பொருள்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் பணம் பட்டுவாடா செய்யப்பட வேண்டும். ஆனால் இரண்டரை ஆண்டுகளாக அனைத்து ஒழுங்குமுறை விற்பனை கூடங்களையும் சோ்த்து ரூ.8 கோடி வரை விவசாயிகளுக்குப் பணப்பட்டு வாடா செய்யவில்லையாம்.

இதைக் கண்டித்து கூனிச்சம்பட்டு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் முன் விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது மழைக்காலத்தில் விவசாயிகள் கொண்டு வரும் விளை பொருள்களைப் பாதுகாப்பாக வைக்க ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இடவசதி செய்து தரக் கோரியும் முழக்கங்களை எழுப்பினா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் ஆா். அருள் தலைமை வகித்தாா். காங்கிரஸ் சாா்பில் சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவா் டி.பி.ஆா். செல்வம், விசிக மாவட்டச் செயலா் தா. பாண்டுரங்கம், தவெக கிளை நிா்வாகி டி. பக்தவச்சலம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.