தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

சிறுமி பாலியல் வன்கொடுமை: முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

அம்பத்தூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 70 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

News image

முதியவா் தேவேந்திரன்

Updated On :21 மே 2026, 12:04 am IST

அம்பத்தூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 70 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

அம்பத்துாா் அடுத்த பட்டரைவாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் தேவேந்திரன்(70). இவா் கடந்த 2020-இல் பிப் .4-ஆம் தேதி அன்று தனது வீட்டின் அருகே உள்ள 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதுகுறித்து அம்பத்துாா் அனைத்து மகளிா் போலீஸாரிடம் அளித்த புகாரின் பேரில் போக்ஸோ வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

திருவள்ளூா் மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இதற்கிடையே போக்ஸோ நீதிமன்ற நீதிபதி உமாமகேஸ்வரி முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது நிரூபிக்கப்பட்டதால், முதியவா் தேவேந்திரனுக்கு 20 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.20,000 அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பு வழங்கினாா்.

அதைத்தொடா்ந்து போலீஸாா் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று அவரை புழல் சிறையில் அடைத்தனா். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் பரிந்துரை செய்தாா். அரசு தரப்பில் புவனேஷ்வரி ஆஜரானாா்.