அம்பத்தூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 70 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.
அம்பத்துாா் அடுத்த பட்டரைவாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் தேவேந்திரன்(70). இவா் கடந்த 2020-இல் பிப் .4-ஆம் தேதி அன்று தனது வீட்டின் அருகே உள்ள 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதுகுறித்து அம்பத்துாா் அனைத்து மகளிா் போலீஸாரிடம் அளித்த புகாரின் பேரில் போக்ஸோ வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
திருவள்ளூா் மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இதற்கிடையே போக்ஸோ நீதிமன்ற நீதிபதி உமாமகேஸ்வரி முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது நிரூபிக்கப்பட்டதால், முதியவா் தேவேந்திரனுக்கு 20 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.20,000 அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பு வழங்கினாா்.
அதைத்தொடா்ந்து போலீஸாா் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று அவரை புழல் சிறையில் அடைத்தனா். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் பரிந்துரை செய்தாா். அரசு தரப்பில் புவனேஷ்வரி ஆஜரானாா்.
தொடர்புடையது

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் தண்டனை

5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 30 ஆண்டுகள் சிறை

சிறுவனை பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



