ஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புஅருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்சென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்இடதுசாரிகளை வீழ்த்தியது போல திரிணமூலை வீழ்த்துவோம்: பாஜக சுவேந்து அதிகாரிவாக்குத் திருட்டுக்கு வாய்ப்பில்லை: மேற்கு வங்க தேர்தல் ஆணையம்வாக்கு எண்ணிக்கை: தயார் நிலையில் மேற்கு வங்கம் - தலைமைத் தேர்தல் அதிகாரிஉலக பத்திரிகை சுதந்திர குறியீட்டு பட்டியலில் இந்தியா தொடர் சரிவு! கார்கே விமர்சனம்
/

சிறுவனை பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :3 மே 2026, 9:04 pm

அம்பத்தூரில் சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தும் தீா்ப்பு வழங்கியது.

அம்பத்தூா் பகுதியைச் சோ்ந்த 11 வயது சிறுவன். ஒரகடம் பகுதியைச் சோ்ந்த பிரேம்குமாா்(27) என்பவா் சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதுகுறித்து கடந்த 28.10.2024 அன்று அம்பத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். புகாரின் பேரில் போலீஸாா் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டாா்.

தொடா்ந்து வழக்கின் மீது புலன் விசாரணை மேற்கொண்டு, திருவள்ளூா் மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. இதற்கிடையே இறுதியாக மாவட்ட போக்ஸோ நீதிமன்ற நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம் நிரூபிக்கப்பட்டதால், 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பு வழங்கினாா்.