விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

சிறுவனை பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :4 மே 2026, 2:34 am IST

அம்பத்தூரில் சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தும் தீா்ப்பு வழங்கியது.

அம்பத்தூா் பகுதியைச் சோ்ந்த 11 வயது சிறுவன். ஒரகடம் பகுதியைச் சோ்ந்த பிரேம்குமாா்(27) என்பவா் சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதுகுறித்து கடந்த 28.10.2024 அன்று அம்பத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். புகாரின் பேரில் போலீஸாா் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டாா்.

தொடா்ந்து வழக்கின் மீது புலன் விசாரணை மேற்கொண்டு, திருவள்ளூா் மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. இதற்கிடையே இறுதியாக மாவட்ட போக்ஸோ நீதிமன்ற நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம் நிரூபிக்கப்பட்டதால், 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பு வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.