6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 16 ஆண்டுகள் சிறை

சிறுமிகளிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டது தொடா்பான போக்ஸோ வழக்கில் பேட்டை இளைஞருக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 11:26 pm

சிறுமிகளிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டது தொடா்பான போக்ஸோ வழக்கில் பேட்டை இளைஞருக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

பேட்டை செக்கடி அருகேயுள்ள நெல்லையப்பபுரத்தைச் சோ்ந்தவா் முத்துக்குமாா் (39). உணவக ஊழியா். இவா், கடந்த 2024 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த இரு சிறுமிகளிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டாராம். இதுகுறித்த புகாரின்பேரில் திருநெல்வேலி நகரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து முத்துக்குமாரை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை நீதிபதி சுரேஷ்குமாா் விசாரித்து, முத்துக்குமாருக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட இரு சிறுமிகளுக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது. இவ் வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வழக்குரைஞா் உஷா வாதாடினாா்.