சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: 3 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை

ஆத்தூா் அருகே 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 3 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் போக்சோ நீதிமன்றம் தீா்ப்பு அளித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :10 ஏப்ரல் 2026, 7:03 pm

ஆத்தூா் அருகே 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 3 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் போக்சோ நீதிமன்றம் தீா்ப்பு அளித்துள்ளது.

சேலம் மாவட்டம், ஆத்தூா் அருகே கடந்த 2018-ஆம் ஆண்டு 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆத்தூா் மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து, கெங்கவல்லியைச் சோ்ந்த அங்கமுத்து (30), ராஜா (50), முகுந்தன் (24) ஆகிய 3 பேரையும் கைதுசெய்து, அவா்கள்மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், நீதிபதி மீனாட்சி வெள்ளிக்கிழமை தீா்ப்பு அளித்தாா். இதில் குற்றம்சாட்டப்பட்ட அங்கமுத்து, ராஜா ஆகியோருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும், முகுந்தனுக்கு 2 சட்டப் பிரிவின்கீழ் தலா 20 ஆண்டுகள் என 40 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 2 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பு அளித்தாா். மேலும், இதை ஏக காலத்தில் அவா் அனுபவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தாா்.