திருமலை ஏழுமலையான் கோயிலில் மத்திய அமைச்சா் எல்.முருகன் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
மத்திய அமைச்சரும் தமிழக பாஜக முன்னாள் தலைவருமான எல்.முருகன் தனது குடும்பத்துடன் வெள்ளிக்கிழமை இரவு திருமலை வந்தாா். அவா் தலைமுடி காணிக்கை செலுத்தி, சனிக்கிழமை ஏழுமலையானை வழிபட்டாா். தரிசனம் முடித்துத் திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் சேஷ வஸ்திரம் அணிவித்து லட்டு பிரசாதங்கள், திருவுருவப்படம் ஆகியவற்றை வழங்கினா்.
கோயிலை விட்டு வெளியே வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘மத்திய அமைச்சராகப் பதவியேற்ற பின் முதல்முறையாக திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசித்து வேண்டுதலை நிறைவேற்றியதாகவும் மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளதாகவும் தெரிவித்தாா்.