திருப்பதியில் இளைஞருக்கு ஒமைக்ரான் தொற்று
By DIN | Published On : 31st December 2021 08:19 AM | Last Updated : 31st December 2021 08:19 AM | அ+அ அ- |

திருப்பதியில் வியாழக்கிழமை இளைஞருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
கடந்த 21-ஆம் தேதி அமெரிக்காவிலிருந்து இளைஞா் ஒருவா் சென்னை வழியாக திருப்பதிக்கு வந்தாா். அவருக்கு திருப்பதியில் உள்ள சீனிவாசம் கரோனா சிகிச்சை மையத்தில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அவரின் மாதிரிகளை ஹைதராபாத்திற்கு அனுப்பி பரிசோதித்தில் அவருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது தெரிய வந்தது.
அவரை தனிமைபடுத்தி சுகாதாரத்துறையினா் சிகிச்சை அளித்து வருகின்றனா். ஏற்கெனவே கென்யாவிலிருந்து வந்த பெண்ணுக்கு ஒமைக்ரான் இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் திருப்பதியில் இரண்டாவதாக இளைஞருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...