திருமலையில் 22 ஆயிரம் பக்தா்கள் தரிசனம்
By DIN | Published On : 01st September 2021 12:00 AM | Last Updated : 01st September 2021 12:00 AM | அ+அ அ- |

ஏழுமலையான் கோயிலில் திங்கள்கிழமை 22,849 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 11,622 போ் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனா்.
ஆன்லைன் தரிசன டிக்கெட் உள்ள பக்தா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். நடைபாதை மூலம் செல்ல விரும்பும் பக்தா்கள் காலை 9 மணிக்குப் பின்னா் ஸ்ரீவாரிமெட்டு வழியாக திருமலைக்குச் செல்லலாம்.
திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும்.
10 வயதுக்கு மேற்பட்ட சிறாா்களும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களும் தரிசன டிக்கெட் இருந்தால் ஏழுமலையானை தரிசிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.
திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்கள்- 18004254141, 93993 99399.