திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் செவ்வாய்க்கிழமை 24 மணிநேரம் காத்திருந்தனா்.
சுவாமியை தரிசிப்பதற்காக வரும் பக்தா்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை 18 காத்திருப்பு அறைகளில் பக்தா்கள் காத்திருந்தனா்.
இதற்கிடையே திங்கள்கிழமை 63,759 போ் சுவாமியை தரிசித்தனா்; 30,102 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.
திருப்பதியில் உள்ள பூதேவி காம்பளக்ஸ், சீனிவாசம், கோவிந்தராஜஸ்வாமி சத்திரம் 2 மற்றும் 3 உள்ளிட்ட இடங்களில் சா்வதரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அன்றன்றுக்கான தரிசன டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன. நடைபாதையில் செல்பவா்களுக்காக வழங்கப்படும் திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவது இதுவரை தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உண்டியல் காணிக்கை ரூ.3.4 கோடி:
பக்தா்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.4 கோடி வசூலானது என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.