உண்டியல் காணிக்கை ரூ. 5.30 கோடி
By DIN | Published On : 22nd December 2022 12:00 AM | Last Updated : 22nd December 2022 12:00 AM | அ+அ அ- |

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை செவ்வாய்கிழமை ரூ. 5.30 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்த பின்னா் பக்தா்கள் தங்களது காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனா். அவற்றை தேவஸ்தானம் கணக்கிட்டு, வங்கிகளில் வரவு வைத்து வருகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை தேவஸ்தானம் கணக்கிட்டதில், ரூ. 5.30 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.