கா்நாடக மாநிலம் உத்திராதி மடத்தின் மடாதிபதி புதன்கிழமை ஏழுமலையானை வழிபட்டாா்.
திருமலை ஏழுமலையானை தரிசிக்க கா்நாடக மாநிலத்தில் உள்ள உத்திராதி மடத்தின் மடாதிபதி ஸ்ரீ சத்தியபாமா தீா்த்த ஸ்ரீ பாண்டங்கவலரு புதன்கிழமை ஏழுமலையான் கோயில் எதிரில் உள்ள அத்திமரத்தடிக்கு வந்தாா். அங்கு அவரை தேவஸ்தான அதிகாரிகள், அா்ச்சகா்கள் குழு சென்று கோயில் மரியாதை அளித்து அழைத்து வந்து சுவாமி தரிசனத்துக்கு அழைத்துச் சென்றனா். தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு தீா்த்த பிரசாதங்கள் வழங்கினா்.